18 மாத குழந்தை உட்பட மேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் மரணம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கொழும்பு 2ஐ சேர்ந்த ஒன்றரை (18-மாதங்கள்) வயது குழந்தை ஒன்றும் மரணமடைந்துள்ளது.

மேலும், கொழும்பு 15ஐ சேர்ந்த 82 வயது பெண், வெலிகமவை சேர்ந்த 67 வயது பெண், 

வத்தேகமவை சேர்ந்த 73 வயது பெண், நிட்டம்புவை சேர்ந்த 80 வயது பெண்,

ஹலிஓயாவை சேர்ந்த 77 வயது ஆண், மடவலயை சேர்ந்த 73 வயது பெண், ராகமவை சேர்ந்த 32 வயதுடைய 

வைத்தியர் கயான் தந்தனநராயண ஆகியோரே இவ்வாறு மரணமடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுடன் விபத்து, துப்பாக்கி சூடு, தற்கொலை 

மற்றும் பிற நோய்கள் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆக காணப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு