இலங்கையில் கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 1வது நபர்..! தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரமாக தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I

இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய கொவிட்19 தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கையின் 1வது கொரோனா தடுப்பூசியை தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜய விக்கிரம ஏற்றிக்கொண்டார். 

இலங்கையில் கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 

ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனீகா கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆறு வைத்தியசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், முதலாவது தடுப்பூசி படையினருக்கு செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டமாக 

இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு