புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..! திருமணத்தில் கலந்துகொண்டிருந்த 100 பேர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

புதிதாக திருமணமான தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 100 பேரை குடும்பத்தினருடன் தனிமைப்படுத்த சுகாதார பிரிவு துரித நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. 

குறித்த சம்பவம் கடுவெல பாதுகக்க வட்டாரேக்க ஆகிய பகுதிகளில் குறிபிட்ட தம்பதியினர் திருமணவிருந்துபசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர் இதில் கலந்துகொண்டவர்களையே தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் அந்த தம்பதியினர் தேனிலவிற்கு நுவரேலியா சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் போது அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டவர்களை மிகுந்த சிரமதத்தின் மத்தியில் அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரி பெருமளவு மக்கள் கலந்துகொள்ளும் திருமண நிகழ்வுகள் போன்றவற்றை நடத்தும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். 

என வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஹோமகமவில் இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது முதல்தடவையில்லை சமீபத்தில் இன்னொரு விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 12 பேர் பாதிக்கப்பட்டனர் என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு