கொரோனா சிகிச்சை நிலையத்தில் நடந்த பூப்புனித நீராட்டு விழா..! தாதியர்களின் நெகிழ்ச்சி செயல்..

ஆசிரியர் - Editor I

கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயதான சிறுமி பூப்பெய்திய நிலையில் சிகிச்சை நிலையத்திலேயே பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது.

குறித்த சம்மவம் எம்பிலிபிட்டி யோதகம கொரோனா சிகிச்சை மையத்தில் சகோதர இன பெண் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.

கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 13 வயது சிறுமி ஒருவருக்கே இவ்வாறு பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த சிறுமியின் தாய் தாதி ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், 

அந்த தாதி ஏனைய தாதிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்வை நடத்தியாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு