நிலமை மோசமாகி கொண்டிருக்கிறது..! அடுத்த இரு வாரங்களில் கொரோனா மரணங்களும் அதிகரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் நாளொன்றுக்கு 900 ஜ அண்மித்ததாக கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை ஆபத்தான அறிகுறி என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் ஹரித்த அலுத்கே கூறியுள்ளார்

மேலும் இதே நிலைமை தொடருமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்போடு எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். 

எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக் கொள்ள வேண்டும். 

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு