திறக்கப்பட்ட விமான நிலையங்கள்..! 1வது விமானம் 50 இலங்கையர்களுடன் நாட்டுக்குள் வந்தது..

ஆசிரியர் - Editor I

கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் 1வது விமானம் 50 இலங்கையர்களுடன் இன்று நாட்டுக்குள் நுழைந்திருக்கின்றது. 

ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களை தவிர, மாலைதீவு, பாகிஸ்தான், துருக்கி மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மேலும் 300 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக 

கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க 

மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையங்கள் 9 மாதங்களின் பின்னர் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு