சிறுவர் பாதுகாப்பு பிரிவு பெண் அதிகாரி மீது துஷ்பிரயோகம் புரிந்த பிரதேச செயலர் பிணையில் விடுதலை..!

ஆசிரியர் - Editor I

சிறுவர் பாதுகாப்பு பிரிவு பெண் அதிகாரி மீது துஷ்பிரயோகம் புரிந்த பிரதேச செயலர் 2 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் கிரியெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிரியெல்ல பிரதேச செயலகத்தின் செயலாளர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, 

கிரியெல்ல பிரிவுக்கான சிறுவர் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவர் கடந்த 15 ஆம் திகதி கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுளித்துள்ளார். 

 இந்தச் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பிரதேசத்திற்கு பொறுப்பான சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகாரிசபையினாலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் பிரதேச செயலகத்தின் செயலாளர் கைது செய்யப்பட்டதுடன், அவர் நேற்று இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

நீதிவான் சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் மோ மாதம் 11 ஆம் திகதி 

அவரை மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு