தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்தப்படும் ஹோட்டல்களின் உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் வசூலிக்கும் கும்பல்..! நடவடிக்கையில் இறங்கிய இராணுவம்..

ஆசிரியர் - Editor I
தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்தப்படும் ஹோட்டல்களின் உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் வசூலிக்கும் கும்பல்..! நடவடிக்கையில் இறங்கிய இராணுவம்..

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தப்படும் ஹோட்டல்களின் உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் வசூலிக்க முயற்சிகள் நடப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அவ்வாறானவர்களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

மேலும் ஹோட்டல் உரிமையாளர்கள் நிறைவேற்று அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபரில் ஆரம்பமான கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களாக செயற்படும் ஹோட்டல்களின் உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

வர்ததக நடவடிக்கைகளிற்காக இந்த ஹோட்டல்கள் வெளியாட்களுக்கு பணம் செலுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ள அவர், வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களை நியாயமான முறையில் நடத்த வேண்டும், உணவுகளை பராமரிப்புகளை சிறந்த முறையில் வழங்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த கட்டணங்களில் முழுமையான வசதிகளை வழங்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அச்சுறுத்தி பணம் பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்களையும் இராணுவத்தளபதி வழங்கியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு