இலங்கையில் புதியவகை வீரியம்கூடிய கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..! துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I

பிரிட்டன் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வீரியம் கூடிய புதியவகை கொரோனா தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை சுகாதார சேவைகள் பிரதி இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு