கொரோனா தொற்றை காரணம் காட்டிக்கொண்டு அறைகளுக்குள் முடங்காதீர்கள்..! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு, மக்களிடம் செல்லுங்கள்..

ஆசிரியர் - Editor I

கொரோனா பரவலை காரணமாக கூறிக்கொண்டு மூடிய அறைக்குள் முடங்கி கிடக்காமல் கிராமங்களுக்கு சென்று மக்களுடைய பிரச்சினைகளை பாருங்கள் என அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

“கிராமத்துடன் பேச்சு” என்ற வேலைத்திட்டம் தொடர்பாக அலரி மாளிகையில் இன்று அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியிருக்கின்றார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கொரோனா பரவலை காரணம் காட்டிக் கொண்டு மூடிய அறைக்குள் முடங்கியிருப்பதால் எந்தவொரு பயனும் இல்லை. 

அறைகளில் இருந்து வெளியேவந்து மக்களை சந்தித்து மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள். என பணிப்புரை வழங்கியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு