ஒக்ஸ்போட் தயாரித்த “அஸ்ட்ரா ஜெனேகா” தடுப்பூசி பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை வரும்..!

ஆசிரியர் - Editor I
ஒக்ஸ்போட் தயாரித்த “அஸ்ட்ரா ஜெனேகா” தடுப்பூசி பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை வரும்..!

இலங்கைக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதியில் “அஸ்ட்ரா ஜெனேகா” கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான குழுவின் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும், என்றார். இலங்கையில் பயன்படுத்த மிகவும் பொருத்தமான தடுப்பூசி இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி ஆகும், 

இது இந்தியாவிலும் உருவாக்கப்பட்டு மற்றும் சோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது.தடுப்பூசிக்கான நிதி ஒதுக்கீடு இப்போது நிறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.அமெரிக்காவில் ஃபைசர் தடுப்பூசி 94.5% வெற்றிகரமாக இருந்தபோதிலும், 

தடுப்பூசி ஒன்று $ 20 டொலர் மற்றும் -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்க வேண்டியிருப்பதால் இலங்கையில் பயன்படுத்த கடினம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த வசதியுடன் ஃபைசர் தடுப்பூசிக்கு சுமார் ரூ .10,000 செலவாகும் என்று வீரதுங்க கூறினார், 

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை ஒரு நிலையான குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க முடியும் என்றும் சுமார் 3 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கலாம் என்றும் கூறினார். இதன் வெற்றி விகிதம் 90% ஆகும், என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு