தம்மிக்கவின் கொரோனாவுக்கான பாணி மருந்து ஒரு பித்தலாட்டம்..! முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க பகிரங்கம்..

ஆசிரியர் - Editor I

கேகாலை ஆயுள்வேத மருத்துவர் தம்மிக்க பண்டார தயாரித்துள்ள கொரோனாவுக்கான பாணி மருந்து ஒரு பித்தலாட்ட வேலை என முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயமும் தற்போதைய சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான அணில் ஜயசிங்க கூறியுள்ளார். 

இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆயுர்வேத ரீதியிலான மருந்து வகைகள் இதுவரை கொரோனா தடுப்பிற்காக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 

மேற்கத்தேய மருந்து வகைகளே இன்று கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட ரீதியில் இந்த தொற்றுக்கு மருந்து வகைகளை பயன்படுத்த முயற்சிக்கலாம். இருப்பினும் நாடு என்கிற ரீதியில் அது சாத்தியப்படாது. 

எனவே விஞ்ஞான ஆய்வு ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் தனக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தம்மிக்கவின் பாணி மருந்து ஒரு பித்தலாட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு