நாடு முழுவதும் கொரோனா அபாயத்தின் மத்தியில் வழிப்பறி கொள்ளை, சங்கிலி அறுப்பு அதிகரிப்பு..! பாதுகாப்பு அமைச்சுக்கு பொலிஸார் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் வீதிகளில் செல்வோரிடம் வழிப்பறி கொள்ளைகள் மற்றும் பிரதானமாக பெண்களிடம் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர். 

அமைச்சருடனான கலந்துரையாடல் ஒன்றின் போது இதனை பொலிஸார் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இவ்வாறான பின்னணியில், பாதைகளில் தனியாக பயணிக்கும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்லையிட்டு செல்லும் நடவடிக்கைகள் பல 

அடுத்தடுத்து பல இடங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.இந்த தங்கச் சங்கிலி கொள்ளைகளில் அதிகரிப்பு தற்போது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன 

பொது மக்களை கேட்டுக்கொண்டார். குறிப்பாக மாலை நேரங்களில், தனியாக நகைகளை அணிந்து செல்லும் போது கூடிய கவனத்துடன் இருக்குமாரும் குறுக்கு வீதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கோரியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு