வடக்கில் 1வது கொரோனா மரணம் பதிவானது..! 60 வயதான பெண்..

ஆசிரியர் - Editor I

வவுனியா - உலுக்குளம் 60 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உலுக்குளத்தை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. 

பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண்மணி இன்றையதினம் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். அவருக்கு நிமோணியா காச்சல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு