யாழ்ப்பாண இளைஞன் விமான நிலையத்தில் கைது..! சீ.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண இளைஞன் விமான நிலையத்தில் கைது..! சீ.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரம்..

கனடாவுக்கு செல்வதற்கான போலி கடவுசீட்டுடன் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளான். 

துபாய் மூலம் கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறிப்பிட்ட இளைஞன் சமர்ப்பித்த கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து விமானநிலைய அதிகாரிகள் 

விமானநிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு பிரிவின் எல்லை கண்காணிப்பு பிரிவிற்கு அந்த கடவுச்சீட்டை அனுப்பியுள்ளனர்.குறிப்பிட்ட கடவுச்சீட்டை ஆராய்ந்தவேளை அந்த கனடா கடவுச்சீட்டு வேறு ஓருவடையது என்பதும் 

மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தள்ளது.இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த அந்த இளைஞனை கைதுசெய்த குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் விசாரணைகளிற்காக சிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு