பண்டிகை காலங்களில் மதுபானசாலைகள் பூட்டப்படுமா..? கலால் திணைக்களம் விளக்கம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் தற்போதுள்ள கொரோனா அபாய நிலையில் பண்டிகை காலங்களில் மதுபான சாலைகளை மூடப்படுமா? என்ற கேள்விக்கு கலால் திணைக்களம் விளக்கமளித்திருக்கின்றது. 

இது குறித்து கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தொிவிக்கையில், மதுபானசாலைகளை மூடுவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. 

பண்டிகை காலங்களில் மதுபான சாலைகளை மூடுமாறு சில குழுக்கள் ஊடகங்கள் மூலம் கோரிக்கைகள் விடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் அலையின்போது மதுபானசாலைகள் மூடப்பட்டன. 

இதனால் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மதுபானசாலைகள் மீள மூடப்பட்டால் அவ்வாறானதொரு நிலை உருவாகும் என்றும் கூறினார்.

தற்போது நாட்டில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலும் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளை தவிர பண்டிகை காலங்களில் மதுபான சாலைகளை மூட எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு