இரணைமடு குளத்தின் வான் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டது..! நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு, வடிநில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில் இன்று மாலை குளத்தின் இரு வான் கதவுகள் 6 அங்குளம் அளவுக்கு திறக்கப்பட்டுள்ளது. 

குளத்தின் நீரேந்து பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரித்திருக்கும் நிலையில் குளத்திற்கான நீர்வரத்து சடுதியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் வான் கதவுகளை திறந்துவைத்திருக்கின்றார். 

குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக தற்போதுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. 

இதனால் இரணைமடு வடிநில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு