பிரித்தானியாவில் (லண்டன்) சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை சடுதியாக நிறுத்தம்..! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I

பிரித்தானியாவில் திரிபுபட்ட புதியவகை கொரோனா தொற்று பரவும் நிலையில் பிரித்தானியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். 

பிரித்தானியாவுடனான சகல போக்குவரத்து தொடர்புகளையும் ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியிருக்கும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் இந்த திரிபுபட்ட புதியவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பிரித்தானிய விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்ய தீர்மானித்த அரசு அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதையும் நிறுத்தியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு