கள்ள மாடு கடத்திய கும்பல் யாழ்.கேரதீவில் படையினரால் கைது..! 15 மாடுகள் மீட்பு, கடத்தல்காரர்கள் இருவர் கைது..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சியிலிருந்து எந்தவொரு அனுமதியும் பெறாமல் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 15 மாடுகள் கேரதீவு - சங்குப்பிட்டி பகுதியில் பாதுகாப்பு தரப்பினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாரவூர்தி ஒன்றை சோதனையிட்டபோதே மாடு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்போது மாடுகளை கடத்திவந்த குற்றச்சாட்டியல் முஸ்லிம் நபர் ஒருவரும், தமிழ் நபர் ஒருவரும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களும், கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் பாரவூர்தி ஆகியனவும் சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

மேலதிக விசாரணைகளை சாவகச்சோி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு