பண்டிகை நாட்களில் ஊரடங்கா..? இராணுவ தளபதி விளக்கம், பயண கட்டுப்பாடு எந்த நேரத்திலும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

பண்டிகை காலத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதற்கான தீர்மானங்கள் எவையும் தற்போது இல்லை. ஆனால் இந்த வாரத்தின் இறுதியில் பெறப்படும் தகவல்கள் பொிதும் கவனத்தில் எடுக்கப்படும். என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு உத்தரவு விதிக்கவோ அல்லது பண்டிகை காலத்தில் பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு 

எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். மக்கள் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு