சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படுமா? உயர்மட்ட கலந்துரையாடலில் இன்று தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படுமா? உயர்மட்ட கலந்துரையாடலில் இன்று தீர்மானம்..

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது குறித்து இன்று இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அதிகாரிகள், விமான நிலையத் தலைவர்கள் மற்றும் சுற்றுலா துறை உள்ளிட்ட தொடர்புடைய அரசதுறைகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

 விமான நிலையம் சுமார் பத்து மாதங்களாக சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. சீனாவின் வுஹானில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து சுற்றுலாத் துறை முற்றிலுமாக சரிந்துள்ளது. 

இந்நிலையில் முறையான சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்க பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 

ஜனவரி மாதம் விமான நிலையத்தை திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு