கொரோனா தொற்று ஒரு தடையல்ல..! எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடையுங்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள், கல்வியமைச்சுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டு..

ஆசிரியர் - Editor I

முன்பள்ளிகள் தொடக்கம் பல்கலைகழகங்கள் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை தயாரிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் கொரோனா தொற்று ஒரு தடையல்ல. 

மனிதவள அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நாட்டின் எதிர்கால தலைமுறையினர் உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கண்டவாறு கல்வி அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளார். கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து இராஜாங்க அமைச்சுகளும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக 

எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வுசெய்யும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்குத் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது.

ஒரு தேசிய கல்விக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கு எனது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் கூடிய தனிப் பாடத்திட்டத்தின் கீழ்,முன்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை எமது கல்வி முறைகளை உருவாக்குவது எமது மற்றொரு நோக்கமாகும்.

தத்தமது இலக்குகளை அடைந்துகொள்வதற்காக, கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் வரும் கல்வி சீர்திருத்த, திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு

அறநெறிப் பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவேனா மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சு பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, 

முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள், கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு;மற்றும் திறன் விருத்தி, தொழிற்கல்வி, 

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு -ஆகியன முன்னெடுத்துள்ள திட்டங்களை நான் தனித்தனியாக இன்று ஜனாதிபதி ஆராய்ந்தார். 

அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, விஜித பேருகொட, சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர 

மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோர் இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு