"புரவி" புயலுடன் கொடிகட்டி பறந்த கசிப்பு வியாபாரம்..! முற்றுகையிட்ட பொலிஸார், ஒருவர் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.புத்தூர் - நவக்கிரி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்றய தினம் இரவு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களை மீட்டுள்ளனர்.

"புரவி" புயலுடன் குறித்த பகுதியில் கசிப்பு வியபாரம் கொடிகட்டி பறப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அச்சுவேலி பொலிஸார் குறித்த கசிப்பு உற்பத்தி இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும்  சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு