தோல்வியில் முடிந்த தங்க வேட்டை!

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு பொலிஸார் இன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு-சுதந்திபுரம், நிரோஸன் விளையாட்டு மைதானத்தின் பல இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் விசேடப் படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினால் இவ்வாறு மைதானத்தின் பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு-நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவுக்கமைய குறித்த விளையாட்டு மைதானத்தின் பல இடங்கள் தோண்டப்பட்ட போதிலும்,அங்கு எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.