யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை..! இருவர் சிக்கினர், நகைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் 7 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளில் உள்ளவர்கள் 

வெளியில் சென்றிருந்த போது, பட்டப்பகலில் வீடுகளை உடைத்து நகைகள் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணம் 

மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு 

கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையில் 

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் புகையிர நிலைய வீதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 7 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு