குளத்தை துப்புரவு செய்த 18 வயதான இளைஞன் சேற்றில் மூழ்கி உயிரிழப்பு..! யாழ்.நுணாவிலில் துயர சம்பவம்..
குளத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த 18 வயதான இளைஞன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நுணாவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
நெல்லியடி மத்திய கல்லுாரியின் உயர்தர பிரிவு மாணவனான தேவராசா லக்சன் (வயது18) என்ற கடுக்காய் கட்டைவேலி கரவெட்டியை சேர்ந்த இளைஞன்,
நண்வர்களுடன் இணைந்து நுணாவில் குளக்கட்டு பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதக்கு சென்ற நிலையில் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளான்.
குளத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்தார் என்றும்,
அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும்,
இதனால் அவர்கள் கைகைகளை விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே
மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.