யாழ்.நெடுந்தீவில் புயல் பாதிப்புக்களை நோில் ஆராய்ந்தார் யாழ்.மாவட்ட செயலர்..!

ஆசிரியர் - Editor I

“புரவி” புயல் தாக்கத்திற்குள்ளான நெடுந்தீவுக்கு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தலமையிலான அதிகாரிகள் குழு இன்று நோில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளது. 

நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி 

மற்றும் நெடுந்தீவு பிரதேச உத்தியோகத்தர்கள் களவிஜயம் செய்து புரெவி புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக நெடுந்தீவு பிரதேச மக்கள் 

மற்றும் நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புகளுடன் கலந்துரையாடினர்.இவ் களவிஜயத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களது பிரச்சனைகள், 

நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களது போக்குவரத்து பிரச்சனைகள், துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் கடலரிப்பு தொடர்பான பிரச்சனைகள் 

ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு