திருட சென்ற இடத்தில் திருடனின் மனிதாபிமானம்..! திருடனால் காப்பாற்றப்பட்ட வயதான பெண்மணி, யாழ்.சாவகச்சோில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..

ஆசிரியர் - Editor I
திருட சென்ற இடத்தில் திருடனின் மனிதாபிமானம்..! திருடனால் காப்பாற்றப்பட்ட வயதான பெண்மணி, யாழ்.சாவகச்சோில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..

யாழ்.சாவகச்சோியில் வீடு புகுந்து திருடுவதற்காக சென்றிருந்தபோது வீட்டின் உரிமையாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அவரை ஆறுதல் படுத்தியதன் பின் திருடி சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

சாவகச்சோி - கல்வயல் பெருங்குளம் வேதன பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் கந்தசுவாமி கோவில் பகுதிகளில் சுமார் 6 வீடுகளில் நேற்று இரவு தொடர் கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள வீடொன்றின்

கதவுகளை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர். இதன்போது வீட்டின் உரிமையாளரான வயேதான பெண்மணிக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கின்றது. உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அதிர்ச்சியடைந்த பெண்மணியை

சாந்தப்படுத்திவிட்டு பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள், நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு