"புரவி" புயல் அனர்த்தம் யாழ்.மாவட்டத்தில் நள்ளிரவுவரை 459 குடும்பங்கள் பாதிப்பு..! 3 பேரை காணவில்லை, சிறுமி உட்பட 4 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I

"புரவி" புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு வரையில் 459 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1589 பேர் பாதக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆங்காங்கே மீட்பு பணிகள் இடம்பெற்றிருப்பினும் 15 வீடுகள் முழுமையாகவும் 140 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

மேலும் தாழ்நில பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய், பருத்துறை, சாவகச்சேரி பகுதிகளில் அதிகளவு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் நள்ளிரவு வரையில் 3 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் வல்வெட்டித்துறையில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு