யாழ்.பொன்னாலை கடலில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்த்தரை காணவில்லை..!
யாழ்.பொன்னாலை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.