யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை..! 1431 குடும்பங்கள் பாதிப்பு, பல கிராமங்கள் வெள்ளத்தில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை..! 1431 குடும்பங்கள் பாதிப்பு, பல கிராமங்கள் வெள்ளத்தில்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் கனமழை மற்றும் காற்றினால் சுமார் 1431 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டத்தில் தொடரும் மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் நேற்று இன்றும் அதிகாலை நேரங்களில் 

அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியிருக்கின்றது. மேலும் சில பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் சுமார் 1431 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 31பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோன்று இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்ததோடு 481 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் அதிக சேதமடைந்த பிரதேசமாக 

 பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பகுதிகள் அறிக்கையிடப்பட்டுள்ளது. என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு