யாழ்.நகரில் உள்ள சைவ உணவகத்தில் பணியாளர் சடலமாக மீட்பு, 3 நாட்களுக்கு முன் தென்னிலங்கையிலிருந்து வந்தவராம்..
யாழ்.நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றிய 41 வயதான நபர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த நபர் தென்னிலங்கையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவருடைய இறப்பிற்கு காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.