யாழ்.நகரில் உள்ள சைவ உணவகத்தில் பணியாளர் சடலமாக மீட்பு, 3 நாட்களுக்கு முன் தென்னிலங்கையிலிருந்து வந்தவராம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றிய 41 வயதான நபர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த நபர் தென்னிலங்கையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்ததாக கூறப்படுகின்றது. 

மேலும் அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவருடைய இறப்பிற்கு காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு