யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தது எதனால்..? பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபர் டெங்கு காய்ச்சலினாலேயே உயிரிழந்துள்ளதாக நேற்றய தினம் கண்டறியப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி வைத்தியசாலையில் காச்சல் காரணமாக நேற்று முன்தினத் அதிகாலை உயிரிழந்தவர் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்தாரா என அச்சம் தெரிவிக்கப்பட்டு சடலம் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இருந்தபோதும் உயிரிழந்தவரிற்கு கொரோனா இல்லை எனக் கண்டறியப்பட்டதனால் உயிரிழந்தவரின் சடலம் உறவுகளிடம் ஒப்படைப்பதற்காக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு மேற்கோண்ட பிரேத பரிசோதனையின்போதே இறப்பிற்கு டெங்கு நோய்த் தாக்கமே காரணம் எனக் கண்டறியப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு