பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..! கொரோனா தொற்றுடன் தப்பி ஓடிய பெண், தகவல் தொிந்தால் அறிவியுங்கள்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..! கொரோனா தொற்றுடன் தப்பி ஓடிய பெண், தகவல் தொிந்தால் அறிவியுங்கள்..

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து தனது 2 வயது குழந்தையுடன் தப்பி ஓடிய பெண்ணை கண்டுபிடிக்க புலனாய்வு பிரிவு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர். 

குறித்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் பொலிஸார், அவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகம் - 0112 42 11 11, பொலிஸ் அவசரகால பதிலளிப்பு பிரிவு -0112 433 333 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தரும்படி 

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எஹலியகொட பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 

சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு முன்தினம் இரவு 09 மணியளவில் தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.குறித்த பெண் ,தனது மகனுடன் பஸ்சில் தனது ஊருக்குச் சென்றுள்ளதுடன், 

அங்குள்ள உறவினர் ஒருவருன் வீட்டில் அவரது மகனை ஒப்படைத்து விட்டு அவர் அங்கிருந்து சென்றிருந்தார். பொலிஸாரின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று காலை குறித்த பெண்ணின் மகனை எஹலியகொட, யாபா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து அடையாளம் கண்ட பொலிஸார், 

அவரை மீண்டும் சிகிச்சைக்காக அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் இருந்த வீட்டாரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.எனினும் சிறுவனின் தாய் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. 

இதனையடுத்து இவரை தேடும் பணியில் விசேட பொலிஸ் குழுக்கள் நேற்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது, புலனாய்வுப் பிரிவினரின் தேடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு