யாழ்.வடமராட்சி - துன்னாலையில் அதிரடிப்படை, பொலிஸார் குவிக்கப்பட்டு பாரிய சுற்றிவளைப்பு..! 4 பேர் கைது..
யாழ்.வடமராட்சி துன்னாலை - வேம்படி பகுதி இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்துடன், எந்தவிதமான அனுமதி பத்திரங்களுமற்ற 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.