யாழ்.ஆனைக்கோட்டையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து..! 3 பேர் படுகாயம்..(படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I

யாழ்.ஆனைக்கோட்டை - ஓட்டுமடம் பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

யாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது ஆறுகால்மடத்திலிருந்து யாழ்.நகரம் நோக்கி பயணித்த பட்டாவாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், 

அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுனர். 

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு