கட்டாயப்படுத்தி கலியாணம் செய்ய முடியாது..! கஜேந்திரன்கள் குறித்து உறுதியான தீர்மானம் எடுங்கள், தமிழ்தேசிய கட்சிகள் கூட்டத்தில் காரசாரம்..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை அனுட்டிப்பது தொடர்பாக இன்று மாலை ஆராய்ந்துள்ள நிலையில் குறித்த கூட்டத்திலும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றது. 

இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் சில தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இந்தச் செயற்பாட்டிற்கு தமது கடுமையான கண்டனத்தை தொிவித்திருக்கின்றனர். குறிப்பாக கட்டாயப்படுத்தி காலியாணம் செய்துவைக்க முடியாது. 

கஜேந்திரன்களின் உறுதியான தீர்மானம் என்ன என்பதை அறியுங்கள். அவர்களுக்காக ஒவ்வொரு கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு காத்திருக்க முடியாது. என பகிரங்கமாகவே கூறியுள்ளன. இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணி

தலைமைகள் தமிழ்தேசிய கட்சிகளின் பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கவில்லை. என கூறப்படுகிறது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு