“உங்களுக்கு ஒரு வீடு உங்கள் நகரத்தில்..” யாழ்.நாவற்குழியில் 100 வீடுகளை கொண்ட பாரிய குடியிருப்பு திட்டம். இன்று பணிகள் ஆரம்பம்...

ஆசிரியர் - Editor I

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் “சியபத்த” உங்களுக்கு ஒரு வீடு உங்கள் நகரத்தில் என்ற கருப்பொருளில் யாழ்.நாவற்குழியில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பு திட்டம் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இன்று நடைபெற்றுள்ளது. 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான இன்று நவம்பர் 18ஆம் திகதி இந்த வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடுமுழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.உசா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,

மத தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு