கடலில் மிதந்துவந்த மர்ம பொருளை பிரித்து பார்த்தவர் மயங்கி விழுந்தார்..! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

கோப்பு படம்

யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றிருந்தபோது கடலில் கிடைத்த மர்ம பொருளை பிரித்து பார்த்தவர் மயங்கி விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

இன்று இடம்பெற்றுள்ளது.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த தியாகராசா அன்ரன் (வயது-51) என்பவரும் அவருடைய மைத்துணரும் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் மர்மப் பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. 

எண்ணைக் கான் போன்று காணப்பட்ட குறித்த பொருளை அன்ரன் திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்து வெளியேறிய மர்மப் புகையை நுகர்ந்தை அடுத்து அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.இதனை அடுத்து மைத்துணர் அவரை கரை சேர்த்து மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு