உயிலிழந்த முதியவருடைய சடலம் இரகசியமாக புதைப்பு..! சொத்து தகராறு காரணமா? யாழ்.உடுவிலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.உடுவில் பகுதியில் உயிரிழந்த முதியவர் ஒருவருடைய சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலத்தை தோண்டி எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,

குறித்த விடயத்தில் சொத்து தகராறு உள்ளதாக கூறப்படுகிறது. உடுவில் மல்வம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மல்வம் பகுதில் சுமார் ஒன்றரை மாதங்களின் முன்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் முதியவரின் உடல் மல்வம் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

அவரது இறப்பு பற்றி யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சொத்துக்களை பகிரும் போது உறவினர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து தகவல் வெளியாகி, பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீதிமன்ற அனுமதியுடன் சடலம் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு