நெஞ்சுவலியால் இறந்த முதியவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..! யாழ்.மட்டுவிலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

நெஞ்சு வலியினால் உயிரிழந்த முதியவருடைய சடலம் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மட்டுவில் பகுதியில் நெஞ்சுவலியினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிராம சேவகரால் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது. 

முதியவர் உயிரிழந்த சம்பவம் கிராம சேவகருக்கு தொியப்படுத்தப்பட்ட நிலையில் கிராமசேவகர் குறித்த நடவடிக்கையினை எடுத்துள்ளார். 

இறந்தவரின் சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு