தீபாவளி தினத்தில் கோஷ்டி மோதல்..! 10 பேர் படுகாயம், பலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்..
யாழ்.வடமராட்சி - அல்வாய் பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மோதலில் காயமடைந்த 10 பேர் நேற்றிரவு 10 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், பலத்த காயமடைந்த சிலர்
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இரு விளையாட்டு கழகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி
இவ்வாறு மோதலில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.