தென்னிலங்கையிலிருந்து வந்து யாழ்.பருத்துறை - நெல்லியடியில் பலுான் வியாபாரம்..! சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..
தென்னிலங்கையிலிருந்து வந்து யாழ்.பருத்தறை - நெல்லியடி பகுதியில் பலுான் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுகாதார பிரிவினால் வெளியேற்றப்பட்டதுடன், பலுான் வாங்க கூடியிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பபட்டிருக்கின்றனர்.
நாட்டில் நிலவும் கோரோனா வைரஸ் பரவலையடுத்து தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நடைபாதை வியாபாரங்களுக்கும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறியமையால்
பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை நண்பகல் நெல்லியடியில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் வாயு சிலின்டர் பயன்படுத்தி பலூன்கள் மற்றும் காற்றடைக்கப்பட்ட பொம்மைகள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதனை அறிந்த கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேற்படி நடவடிக்கையை எடுத்தார்.