யாழ்.சுழிபுரம் - குடாக்கனை இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் 3 பேர் பொலிஸ் காவலில்..! பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுழிபுரம் - குடாக்கனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குரூர இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பொலிஸாரால் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்றுவந்த தொடர் முறுகல் நிலை காரணமாக நேற்றிரவு வாள்கள், ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் நடத்திய தாக்குதலில் இருவர் கொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்தனர்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் உறவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டது. அதனால் பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் சம்பவ இடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு