கோவில்களுக்குள் நிற்பதற்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி..! யாழ்.மாவட்ட செயலர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

தீபாவளி தினமான நாளை ஆலயங்களில் பொதுமக்கள் கூட வேண்டாம். என அறிவுறுத்தியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், கோவில்களில் விரத பூசைகளும் நடைபெறுவதால் கோவில்களுக்குள் 5 பேருக்கு மேல் மக்களை அனுமதிக்கவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.  

தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் 

பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு