யாழ்.நகரில் பிரபல ஹோட்டல் சுகாதார பிரிவினால் தற்காலிகமாக பூட்டப்பட்டது..! முன் அனுமதி பெறாமல் திருமணம் நடத்த அனுமதித்தார்களாம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அனுமதி பெறாமல் திருமண நிகழ்வு நடத்துவதற்கு அனுமதித்ததான குற்றச்சாட்டில் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது. 

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பேணுவதற்காக திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சுகாதார பிரிவின் முன் அனுமதியை பெறவேண்டும். எனினும் முன் அனுமதியை பெறாமல், 

திருமண நிகழ்வை நடத்துவதற்கு இடமளித்ததாக குறித்த ஹோட்டல் நிர்வாகம் மீது குற்றம் சுமத்தப்பட்டு யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் ஹோட்டல் பூட்டப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்ட செயலகத்தில் நுாற்றுக்கணக்கானவர்கள் எந்தவொரு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் பேணாமல் கூடியபோது வேடிக்கை பார்த்த யாழ்.மாநகர சுகாதார பிரிவுக்கு

திருமண நிகழ்வு நடத்தியது பாரிய சுகாதார பாதுகாப்பு விதி மீறலாக தொிந்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு