கஞ்சா கடத்திய 20 வயதான இளைஞன் கைது..! யாழ்.பருத்துறை - இன்பர்சிட்டி பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கஞ்சா கடத்திய 20 வயதான இளைஞன் கைது..! யாழ்.பருத்துறை - இன்பர்சிட்டி பகுதியில் சம்பவம்..

யாழ்.பருத்துறை - இன்பர்சிட்டி பகுதியில் இன்று மாலை 3 கிலோ 335 கிராம் கஞ்சாவுடன் 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். 

கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நடத்திய முற்றுகையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கிலோ 335 கிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு