யாழ்.தென்மராட்சி - கரம்பகம் வீட்டில் விபச்சாரம் மட்டுமல்ல, கருக்கலைப்பும் இடம்பெற்றதாம், மருந்து விநியோகித்த வைத்தியசாலை ஊழியரும் கைதாம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.தென்மராட்சி கரம்பகம் பகுதியில் நேற்றய தினம் இரவு முற்றுகையிடப்பட்ட வீட்டில் விபச்சார மட்டுமல்லாமல் கருக்கலைப்பு இடம்பெற்றதாகவும், அதற்கான சாதனங்கள் அங்கே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டு இரு பெண்கள் மற்றும் நிலைய உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதன்போது குறித்த குடிசை வீட்டிலிருந்து கருக்கலைப்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் விசுவமடு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நிலையத்திற்கு மருந்துப் பொருட்களை வழங்கி மந்திகை வைத்தியசாலை ஊழியர் ஒருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு