மோசடி பேர்வழியை தமிழகம் கொண்டு சென்ற படகோட்டி 14 நாட்கள் விளக்கமறியலில்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் நிதி நிறுவனம் மற்றும் பிரமிட் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்தாக கூறப்படும் நபரை யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழகம் கொண்டு சென்ற படகு ஓட்டி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இலங்கையில் இருந்து குடும்பமாக தம்பிச் சென்றவர்களை வல்வெட்டித்துறையில் இருந்து படகு மூலம் ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் 32 வயதினையுடைய ஒருவர் வல்வெட்டித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் முன்பாக ஆஜர் செய்யப்பட்டிருந்தார். 

இதன்போதே குறித்த படகு ஓட்டியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு