கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் யாழ்.மண்டைதீவில் தனியாருக்கு சொந்தமான 4 பரப்பு காணியை சுவீகரிக்க திட்டம்..! ஒன்றுகூடி எதிர்க்க வருமாறு அழைப்பு..
யாழ்.மண்டைதீவில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 4 பரப்பு காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மண்டைதீவு - ரி சந்தியில் உள்ள விக்னேஷ்வரன் ஞானேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான சுமார் 4 பரப்பு காணி இவ்வாறு சுவிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் நாளை காலை குறித்த பகுதியில் கூடி எதிர்ப்பை தொிவிக்குமாறு
வலி,வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் கூறியுள்ளார்.